Wednesday, June 27, 2012

செக்ஸ் இன்பத்தை அதிகரிக்க சில வழிகள்!



தற்போது உடலுறவில் திருப்தி இல்லை என்ற குறையோடு ஆண்களும், பெண்களும்
மருத்துவனைகள் நோக்கி படையெடுத்து வருவது அதிகரித்து விட்டது. இதற்கு
முக்கியக் காரணம், செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான். பாலியல்
நிபுணர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள்.

பெண் குறியின்
உட்பகுதி 45 டிகிரி மேல் நோக்கிச் செல்கிறது. கிளர்ச்சியுறாத நிலையில்
அதன் சுவர்கள் சுருங்கியுள்ளன. கிளர்ச்சியின் போது விரிந்து தருகின்றன.
குழந்தை பெறாத பெண்ணின் உறுப்பு 8 செ.மீ. நீளம்,. முன் சுவர் 6 செ.மீ.
நீளம் இருக்கும். ஒரு விரலைக் கெட்டியாகப் பிடிக்கும் அளவு அதன்
குறுக்களவு அமையும். குழந்தை பெறும் போது குழந்தையின் தலை வெளியே வரும்
அளவு விரிந்து கொடுக்கும். ஆகவே சிறிய ஆண்குறி, பெரிய ஆண்குறி என்னும்
வேறுபாடு இதற்கு இல்லை. 

என்னதான் சுருங்கிய போதிலும்
பெண்குறியின் உட்சுவர் ஆண்குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதை
வெளியே விடாத வண்ணம் சிறைப்படுத்தும் அளவு வலிமை இல்லாதது. இந்த வல்லமை
மிருகங்களில் நாய்க்கு மட்டும் அமைந்துள்ளது. நாயின் பெண் குறியில் இப்படி
பூட்டி வைத்துக் கொள்ளும் அமைப்பு உள்ளது.

பெண்குறியின்
உட்சுவர்த் தசைகளைச் சுருக்கும் பயிற்சி மூலம் இன்ப உணர்வுகளை
அதிகரிக்கலாம் என்ற நோக்கில் அதற்கென உள்ள சில பயிற்சிகள் தரப்படுகின்றன.
சிறுநீர் கழிக்கும் போது நிறுத்தி நிறுத்திக் கழிப்பது ஒரு பயிற்சி.
சும்மா இருக்கும் போது ஆசன வாய்த்தசைகளை இறுக்கியும், தளர்த்தியும் ஒரு
பயிற்சி, கெகல் (kegel exercise) என்று இதனைச் சொல்கின்றனர்.

உடலுறவின் பின்பு ரத்தம் வந்தால் கவனம் !


mசில பெண்களுக்கு உடலுறவின் பின்பு
அவர்களின் பெண் உறுப்பிலே இரத்தம் வெளிப்படலாம்.குறிப்பாக சற்று வயது
முதிர்ந்த பெண்களிலே ( நாப்பது வயதலவான) பெண்களிலே உடலுறவின் பின் ரத்தம்
வெளி வருமானால் உடனடியாக அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
ஏனென்றால்
இது கருப்பைப் பையின் கழுத்துப் பகுதியிலே ஏற்படுகின்ற புற்று
நோயின்(cervical carcinoma) ஒரு அறிகுறியாக கூட இருக்கலாம்.
புணர்ச்சியானது
ஆங்கிலத்திலே coitus எனப்படுகிறது. புணர்ச்சியின் பின்பு ரத்தம்
வெளிப்படுதல் post coital bleeding எனப்படுகிறது.

இப்படியான ரத்தப்
போக்கு புற்று நோய் தவிர்ந்த வேறு பல நோய்களிலும் ஏற்படலாம் என்றாலும் ,
இவர்களில் புற்று நோய் இல்லை என்பதை வைத்தியரை நாடி உறுதி செய்து கொள்வது
நல்லதாகும்.
உடலுறவின் பின் ரத்தம் போவது தவிர்ந்த கருப்பைக் கழுத்து
புற்று நோய்க்கான மற்றைய அறிகுறிகளாவன , சாதாரணமாக மாதவிடாய் ஏற்படும்
காலம் தவிர்ந்து மாதவிடாய்க் காலத்துக்கு இடைப்பட்ட நேரத்தில் ரத்தம்
வெளிவருதல்(intermenstrual bleeding), மற்றும் பிறப்பு உறுப்பிலே இருந்து
தகாத மனமுடைய (நாற்றமடிக்கும் ) திரவங்கள் வெளிவருதல்(offensive vaginal
discharge).

3 comments:

  1. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 100 கிராம் நெருஞ்சி
    100 கிராம் அஸ்வஹந்தா 100 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
    Replies
    1. I need this
      Plz sent price and other details
      My mail ID : senthilkumar1974nov @gmail.com

      Delete
    2. I need this
      Plz sent price and other details
      My mail ID : senthilkumar1974nov @gmail.com

      Delete